Saturday, April 28, 2012

பணம்

பணத்தின் பிடியில் நான் ஒரு பிணைய கைதி,
அரியதோர் எண்ணங்களை உருவகிக்க இல்லை கதி, 
இது தானோ படைப்பாளி எனக்கு இட்ட விதி. 


Tuesday, March 20, 2012

(விஞ்)ஞானி

யாசிக்க பிறந்தவர் ஞானி,
யோசிக்க பிறந்தவர் விஞ்ஞானி.
மேனி தனை அறவே அகற்றி வாழ்பவர் ஞானி,
ஏணி தனை அறிவால் ஏறுபவர் விஞ்ஞானி,
ஏன் இந்த வேதனை என்று வியப்பவர் ஞானி.

தொடரும்...

ஆத்திகத்தின் ஆதிக்கம் தெரியும் கோயில்களில்,
நாத்திகத்தின் நாட்டம் புரியும் செயற்கை கோள்களில்,
பூர்வீகத்தின் வினையோ நிழலாக தொடரும் நிகழ் காலத்தில்

கோமாளி

 என் உழைப்பை சுரண்டி உன் புகழ் பாடும் அதிசயர்க்கு தாரை வார்க்கும் இறைவா. 'கடமையை செய், பலனை எதிர் பாராதே' என்ற நின் கூற்று எளியோரை க...